Pages

Sunday 1 May 2011

தமிழ்மணம் கடும் அதிர்ச்சி - காப்பி அடித்து சிக்கினர் பிரபலபதிவர்கள்


யார் சிறந்த பதிவர்?
வடிவேலை கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் என்ற பதிவு
ஈயடிச்ச காப்பி என்ற விதத்தில் இருவரும் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் யார் யாரை பார்த்து காப்பி அடித்தார்கள் என்ற முடிவை வாசகர் இடத்தில் விட்டு விடுகிறோம்.

வேடந்தாங்கல் கருண்-http://sakthistudycentre.blogspot.com/2011/05/blog-post_01.html

விவசாயி -http://kavinthan.blogspot.com/2011/05/blog-post.html

 திறமைக்கு அளவே! இல்லை.

பதிவை எப்படித்தான் பத்து நிமிஷத்தில் காப்பி அடித்தார்களோ! உலகமகா பதிவர் என்ற பட்டம் கொடுக்கிறோம். இனியாவது திருந்துங்க
  
பதிவர்களின் 'பிற'ர் பலத்தை கருத்தில் கொண்டும் முழுப்பெயர்களை ஊகிக்க சில பெயர் டிப்ஸ்:

1.மனோ ரஞ்சித பூ
2.தெரு கவிஞர்
3.நிரந்திர தமிழ்மண தலைவர்
4.பாட்டு ரசிப்பவர்
5. மாத்தி யோசிக்காத பின்னூட்ட அவசரக்குடுக்கை
6.சகதியில் உருளும் சாமி
7. டா போட்டு கால் டி சாப்பிடுவர்
8.காப்பி பேஸ்டில் சரணாலாயம் அமைத்தவர்

இவர்கள் அனைவரும் மறுமொழி என்ற பெயரில் பின்னூட்டப்பகுதியில் அடிக்கும் கூத்து கொஞ்சம் நஞ்சம் அல்ல.இவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது தங்களை குறுக்குவழியில் பிரபலப்படுத்துவது தான்.

இவர்களின் பின்னூட்டப்பகுதியிலிருந்து கீழ்கண்ட முடிவுகள் தொகுக்கப்படுகின்றன

1.இவர்களுக்கு பிறரால் ஓட்டு வரவேண்டியிருக்கிறது.நண்பர்களின் பதிவின் உண்மைநிலையை  விமர்சிப்பதன் மூலம் அது பாழ்பட்டு விடுமோ என்கிற அச்சம்.

2.நண்பர்களை விமர்சனம் செய்வதன்மூலம் அவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வார்கள் என்ற தவறான கணிப்பு

3.குறைகளை வெளிப்படுத்தியப் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர் கடுமையாக தம்மை விமர்ச்சித்தால் அதை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத பரிதாபம்.

4.இது நாள் வரை நன்றாக 'வடை' மற்றும் 'பாயாசம்' போட்ட நண்பர்கள் தம்மை விமர்ச்சிக்க தொடங்கி விடுவார்களோ என்ற பயம்.


இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்...
அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் எழுதலாம்...

இதில் யாரையும் கேவலப்படுத்துவது நோக்கம் அல்ல.பின்னூட்டப்பகுதியை கேவலப்படுத்துவர்களைப்பற்றிய விமர்சனம்.

பதிவுலகில் தனிமனித தாக்குதல்,சினிமா,காப்பி பேஸ்ட் என்ற வகையில் ஏதனும் ஒரு வகையில் கடுமையாக விமர்சனத்தை வெளிப்படுத்தவர்கள் மேலே உள்ள பதிவர்கள்.அவர்களின் சொந்த பதிவில் யாருக்கும் தலையிட உரிமையில்லை. அதை விமர்சிப்பது பதிவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும்.அதே சமயத்தில் பின்னூட்டம் என்ற பகுதி குறிப்பிட்ட பதிவிற்காக பிறரின் சுதந்திரமான கருத்துக்கள் பதிவிட பதிவர்களால் அனுமதிக்கப்பட்ட பகுதி.

அந்த கருத்து சுதந்திரத்தில் இவர்களின் இம்சை தரும் வரம்புமீறிய கிண்டலும், கேலியும் தலையிடுவதாக அமையும் போது இந்த பின்னூட்டப்புலிகளுக்கு விமர்சனம் அவசியமாகிறது.

வாசகர்களே! இவர்கள் இனிமேலும் இந்த மோசமான நடைமுறையை கைவிடாவிட்டால் நமது 49 (0) வாக உள்ள தமிழ்மணம் மைனஸ் ஓட்டு இட தயார் ஆகுங்கள்...

இரண்டாம் பகுதி தயாராகிக்கொண்டிருக்கிறது...